search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டின் பூட்டை உடைத்து"

    • வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீட்டுக்குள் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருடி சென்றது தெரியவந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே முருகன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 58).

    இவர் தினமும் மாலையில் 5 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்னிமலை அருகே அசோகபுரத்தில் வசிக்கும் தனது மகள் சுதா குடியிருக்கும் வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் தனது வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

    வழக்கம்போல் சம்பவத்தன்று மாலை தனது மகள் சுதா வீட்டுக்கு அசோகபுரம் சென்று விட்டு இரவு முத்துலட்சுமி தனது மகள் சுதாவுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டுக்குள் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முகப்பு, மற்றொரு பீரோவை உடைத்து அங்கு வைத்திருந்த ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 4 கடிகாரங்கள், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கேமிரா, ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஜோடி வெள்ளி கொலுசு என மொத்தம் ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    பின்னர் இது குறித்து முத்துலட்சுமி வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 2 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (45). இவர் ஒரு மில்லில் வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாதே ஸ்வரன் தனது மனைவி யுடன் கோபிசெட்டி பாளை யத்திற்கு ஒரு விசேஷத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்க ப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போத பீரோ திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகையும் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மாதேஸ்வ ரன் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பீரோ உடை க்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது தெரிய வந்தது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நசியனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவரின் உறவினர் வீடு அந்த பகுதியில் உள்ளது.

    கணேசனின் உறவினர் வீட்டை பூட்டி விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று விட்டார். வீடு கடந்த 2 மாதங்களாகவே பூட்டிய நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் கணேசன் அந்த வீட்டுக்குச் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடை க்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கணேசன் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • வீட்டின் பூட்டை உடைத்து 2 மடிக்கணினிகள் திருட்டு போனது.
    • பாடாலூர் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்று விட்டு, பின்னர் மதியம் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 2 மடிக்கணினிகள், 2 ஏ.டி.எம். கார்டுகள், 500 ரூபாய், வெள்ளி சங்கிலி ஆகியவை திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்."

    • சம்பவ த்தன்று இரவு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
    • அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ பொருட்கள் சிதறி கிடந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்த பவானி ரோடு சோளிபாளையம் பகுதியை ேசர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவரது மனைவி குஞ்சம்மாள். இவர் 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    ராமசாமி பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் விவசாய விளைபொருள் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தனி தனி யாக வசித்து வருகிறார்கள்.

    இதனால் ராமசாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    அவர் ேவலை முடிந்து காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் காம்பவுண்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம், டி.வி., கியாஸ் சிலிண்டர் ஆகியவை திருட ப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். 

    • பிருந்தா தாய் வீட்டில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீட்டில் அறையில் உள்ள பீரோ கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனி அடுத்த இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (31). இவர் அதே பகுதியில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நேற்று மதன்குமார் தனது தாயின் சிகிச்சைக்காக தாயை அழைத்து கொண்டு பெங்களூர் சென்று விட்டார். பிருந்தா வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் இரவு பிருந்தா தாய் வீட்டில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் அறையில் உள்ள பீரோ கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.

    வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுண ர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    ×